top of page
Search

மல்லாட்டை மண்ணின் மாணிக்கம் !

  • Writer: ARAVINDAN MUDALIAR
    ARAVINDAN MUDALIAR
  • Jul 27, 2023
  • 1 min read

ree

நல்ல இலக்கியவாதியாக நல்ல வாசகனாய் இருக்க வேண்டும் ,

அதற்கான வாழும் சான்று பவா !

மின்சார வாரியத்திலிருந்து வந்த உயரிலக்கிய அழுத்தம் பவா !

வாழ்நாளில் இவர் சந்தித்த பேராசான்கள் எண்ணில் அடங்கா ,

எந்த நாளும் அதற்கான இறுமாப்பு இம்மியும் இல்லா மனிதர் !

தொழில் நுட்பம் வாசிப்பை தின்றது ,

பவா தொழில்நுட்பத்தின் வாயிலாய் வாசிப்பை உயிர்பித்துள்ளார் !

மனிதத்தை முன்னிலைப்படுத்தும் பதிப்பாளர் ,

சாலச்சிறந்த எழுத்தாளர் , ஆகச்சிறந்த நடிகர் ,

ஷைலஜாவிற்கு உலகத்துகாவியங்களெல்லாம் கண்டிராத கதாநாயகன் !

வம்சிக்கு தந்தை மட்டுமல்ல குரு , ஆசிரியர் , வழிகாட்டி !

நல்ல நட்புக்கான இலக்கணம் , வாஞ்சையாய் பழகும் மனிதர்,

என எத்தனை உருவங்கள் அவதாரங்கள் இருந்தாலும் ,

பவா ஒரு தாய் , ஆம் கதை சொல்லும் தாய் ,

இந்த தாயின் கதை கேட்டு உறங்குவோர் எத்தனை எத்தனை ,

இவரின் கதை கேட்டவாறு நடைபயிற்சி செய்வோர் எத்தனை எத்தனை ,

இரயிலில் பேருந்தில் பவாவின் கதையாடல் இல்லாமல் இல்லை பயணம்.

பவா செல்லதுரை ஒவ்வொரு தமிழன் செவிகளில் வாழ்கிறார் ,

செவி வழியாய் இதயத்தில் அமர்ந்து கொள்கிறோர் ,

சோகத்தில் , பயத்தில் , மகிழ்வில் யாரையாவது கட்டியணக்க தோன்றும் ,

நான் பவாவை செவியில் அணைத்துக்கொள்கிறேன் !

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !


 
 
 

Comentários


Post: Blog2_Post

8056770099

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by ARAVINDAN MUDALIAR. Proudly created with Wix.com

bottom of page