நெய்வேலி தங்கம் ! நாகல்கேணி நல்லார் ! முழவில் மூதறிஞர் நெய்வேலி வெங்கடேஷ் !
- ARAVINDAN MUDALIAR
- Dec 22, 2022
- 1 min read

தண்ணுமைப் பின் வழி நின்றது முழவே ,
முழவு முழுமை அடைந்தது நின்வாசிப்பால்,
வாசிப்பில் வற்றாத ஜீவநதி தலையாட்டியார் ,
தலையாட்டியார் தனி வாசித்தால் அனல் பறக்கும்,
பறக்கும் விரல்கள் சிறக்கும் என்றும் சீரிய லயத்தில் ,
லயத்தில் சொற்கட்டுக்கள் பேசும் ,
பேசும் ஓராயிரமாண்டுகள் நின் கும்கிகள்,
கும்கிகளை விஞ்சும் ஃபரன்கள் ,
ஃபரன்களை மிஞ்சும் தாளகதிகள் ,
தாளகதிகளை முந்தும் தொப்பிகள்,
தொப்பிகளை பினதள்ளும் லயக்கட்டுகள்,
ஆம் உங்கள் வாசிப்பில் ஒரு இசைகூறு பிரிதொன்றை முந்தும்
உங்களை வாசிப்பில் முந்த எவருண்டு !
நெய்வேலி வெங்கடேஷ் ஆகச்சிறந்த வித்வான் ஐயமில்லை !
அதிலும் சிறந்த மனிதநேய மாண்பாளர் என்பதில் ஐயமுண்டோ !
கண்கள் சிரிக்கும் வெகு சிலரில் தலைசிறந்தவரிவர் !
வாஞ்சை நாயகன் , எங்கள் பாசமிகு அண்ணன் !
சஞ்சய் அறிந்த புண்ணியத்தில் யாமறிந்த புண்ணியரே !
அன்பு பாராட்டுவதில் உமக்கு இணை எவரே !
தம்பி உடையான் படைக்கஞ்சான் ,
சஞ்சய் வரதர் என இரு தம்பிகள் வாய்த்த தகைமையாளரே !
எங்களை போன்ற எளியாரையும் ஏற்று பழகும் பண்புப்பெட்டகமே !
இன்று இனிது பிறந்தநாள் காணும் எங்கள் மிருதங்க மகாசர்வர்த்தியே !
நெய்வேலி தந்த நல்ல தங்கமே !
நாகல்கேணி நல்லாரே , பெரும் உவப்புமிகு பேராசனே !
வாழி ! வாழி ! நீ பல்லாண்டு ! பல்லாண்டு !
நெய்வேலி வெங்கடேஷ் பாணி பாரெங்கும் பறைசாற்ற ,
ஒராயிரம் சீடர்களை உலகிற்கு அர்பணிக்க அன்பு வாழ்த்துக்கள் !
முழவின் துணையால் தாளங்காட்டி முழவும் யாழும் ஒன்றாய் கூட்டி ,
குரலையதனுள் நன்றாய் ஏற்றி , மூவர் கூட்டணி உலகை ஆளவேண்டுமே !
இசை ஆளவேண்டுமே ! வெங்கடேஷ் நீடுடி வாழ வேண்டுமே !
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
Aravindan
Wow. I bow down to your writing. Keep it